தமிழக அரசைக் கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில், கள்ளச் சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூரில், கள்ளச் சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் அரவை முத்து தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளர் மாலதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசை கண்டித்து எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் கள்ள சாராயத்தை தடுக்க தவறிய ஸ்டாலின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், தமிழக முழுவதும் கள்ளச்சாரத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிர் இழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

Tags

Next Story