மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை செய்து கொடூர தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறியது, மற்றும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான தி.மு.க அரசை கண்டித்து அதிமுக சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பாரதி தலைமையில் சின்னக்கடை வீதியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்‌. அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தியபடி திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் பாரதி, சந்திரமோகன், பூரா சாமி ராதாகிருஷ்ணன் மற்றும் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார், நகர செயலாளர் செந்தமிழன், கவுன்சிலர்கள் கார்த்தி, ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story