நடிகை குஷ்புவின் புகைப்படத்தை எரித்து பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

நடிகை குஷ்புவின் புகைப்படத்தை எரித்து பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

குஷ்பூ படத்தை எரித்த திமுகவினர்

மகளிர் உரிமை தொகை திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய நடிகையுமான குஷ்புவை கண்டித்து பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக பிரமுகர் குஷ்புவின் புகைப்படம் பொள்ளாச்சியில் எரிப்பு.. குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை பிச்சைக்காசு என கொச்சைப்படுத்தி பேசிய பாஜக பிரமுகர் நடிகையுமான குஷ்புவை கண்டித்து பொள்ளாச்சி 13 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மணிமாலா தென்றல் தலைமையில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி குஷ்புவின் புகைப்படத்தை எரித்தனர்.

பொள்ளாச்சி..மார்ச்..14 தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.. இந்த மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பணத்தை விமர்சனம் செய்து பிச்சை காசு என கூறிய பாஜக பிரமுகரும் நடிகையுமான நடிகர் குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணியினர் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 13, வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மணிமாலா தென்றல் தலைமையில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பூவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது பின்னர் நடிகை குஷ்புவின் புகைப்படத்தை தீயிட்டு எரித்து தங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்..

Tags

Next Story