பொன்னேரியில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

பாஜக அரசை கண்டித்து பொன்னேரியில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக அரசை கண்டித்து இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சிபிஎம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் அண்ணா சிலையின் முன்பாக ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளானோர் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்று பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் அத்துமீறலை கண்டித்தும், மாநில உரிமை, கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படும் பாஜக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எதிர்கட்சி ஆளும் மாநில அரசுகள் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் உரிய நிதியை ஒதுக்க மறுப்பதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.

சிபிஎம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, மமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story