காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூரில்,நீட் தேர்வு முறைகேடு- பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் மாநகர தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், நடந்த முறைகேட்டுக்கு, இமாலயா ஊழலுக்கு உறுதுணையாக இருந்த பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு முன்னிலை வகித்தார். அரவக்குறிச்சி நகர மன்ற உறுப்பினர் பஜிலாபானு மற்றும் மாநகர, ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு, மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். மேலும், நீட் தேர்வு முறைகேடுகளை உடனடியாக மறு ஆய்வு செய்து உத்தரவிட வேண்டும் எனவும் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story