தோட்டத்திற்குள் புகுந்து கோழியை விழுங்கிய மலைப்பாம்பு

தோட்டத்திற்குள் புகுந்து கோழியை விழுங்கிய மலைப்பாம்பு

மலைப்பாம்பு 

பொள்ளாச்சி:ஆனைமலையை அடுத்த பொங்காளியூர் பகுதியில் உள்ள அங்குராஜ் என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல கோழிகளை கூண்டிற்குள் அடைக்க சென்றபோது அங்கு கோழியை விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் கிடப்பதை கண்டுள்ளார்.இது குறித்து பாம்பு பிடி வீரரான சர்புதீன் பாஷாவிற்கு தகவல் அளிக்கபட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர் இரையை உண்டு நகர முடியாமல் இருந்த எட்டு அடி நீளமுள்ள மலை பாம்பினை லாவகமாக பிடித்தார்.மீட்கப்பட்ட பாம்பு பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டது.

Tags

Next Story