மனைவியுடன் பேசியதால் ஆத்திரம் - நண்பரை அருவாளால் வெட்டிய கூலித் தொழிலாளி!

மனைவியுடன் பேசியதால் ஆத்திரம் - நண்பரை அருவாளால் வெட்டிய கூலித் தொழிலாளி!

அருவாளால் வெட்டிய கூலித் தொழிலாளி!

பொள்ளாச்சி:மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடு.கரியாம்பாளையம் பகுதியில் மனைவியுடன் தங்கியுள்ள இவர் அப்பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கும் கூலி வேலை செய்து வருகிறார்.இதே தொழில் செய்து வரும் அர்த்தநாரிபாளையம் பகுதியை சேர்ந்த கவுசல்ராஜ் இருவரும் நண்பர்களாக உள்ள நிலையில் சம்பவத்தன்று இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். வெங்கிடுவின் மனைவியுடன் கவுசல்ராஜ் பேசி கொண்டுருப்பதை கண்டவர் என் மனைவியிடம் என்ன பேச்சு என கேட்டு நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.வாக்குவாதம் முற்றிய நிலையில் போதையில் இருந்த வெங்கிடு அருகில் இருந்த அருவாள் கொண்டு வெட்டியதில் கவுசல்ராஜிற்கு உதடு, கண்ணம், மார்பு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கவுசல்ராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆழியார் காவல்துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story