பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி.

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி.

மழை 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் ஏராளமான விவசாயிகள் விளை நிலங்களில் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.இங்கு தென்னை மற்றும் வாழை பிராதானமாக பயிரிடப்படுகிறது. மேலும் கடலை,தக்காளி,அவரை உள்ளிட்ட பயிர்களும் பயிரிடப்படும்.நடப்பாண்டில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவ மழை பொய்த்ததன் காரணமாக விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.இந்நிலையில் வட கிழக்கு பருவமழை தற்போது பெய்ய துவங்கி உள்ளது.நேற்று இரவு முதல் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வடக்கிபாளையம்,புரவிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story