சாரங்கபாணி பெருமாள் கோவிலில் ராமர் பஜனை

சாரங்கபாணி பெருமாள் கோவிலில் ராமர் பஜனை

கோ பூஜை 

அயோத்தி ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டையை முன்னிட்டு மயிலாடுதுறை ஸ்ரீ சாரங்கபாணி பெருமாள் கோவிலில் நடந்த ராமர் பஜனையில் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

உத்திர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் பிராணப்பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி மதியம் பிராணப் பிரதிஷ்டை செய்தார். இந்நிலையில் ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள ஸ்ரீ கோமலவல்லி சமேத அருள்மிகு சாரங்கபாணி பெருமாள் திருக்கோயிலில் பாஜகவினர் சார்பில் ராம பஜனை நடைபெற்றது.

கோயிலில் உள்ள கோசாலையில் பாஜகவினர் தூய்மை பணி செய்து கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பாஜக மத்திய அரசு வழக்கறிஞர் கே ஆர் ராஜேந்திரன் மாவட்டத் துணைத் தலைவர் மோடி கண்ணன் தலைமையில் கட்சியினர், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ராமர் பஜனை கீர்த்தனைகள் வாசித்தனர். கோவிலில் சுவாமி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு கோயிலின் எதிர்ப்புறம் மரக்கன்று நட்டு வைத்தனர்.

Tags

Next Story