ஒருங்கிணைந்த மீன் அங்காடி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பெரிய குளத்துபாளையம் மீன் அங்காடி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் வெங்கமேடு அருகே உள்ள பெரிய குளத்து பாளையம் பகுதியில் கலந்த பல ஆண்டுகளாக மீன் மார்க்கெட் வளாகம் செயல்பட்டு வந்தது. இந்த மீன் மார்க்கெட்டில் கடல் மீன்கள், Jldi மீன்கள், ஆறு மற்றும் குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்கள் வாரந்தோறும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. வாரந்தோறும் திங்கட்கிழமை அதிகப்படியான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கு தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர். இதனிடையே அனைத்து மீன் கடைகளும் ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த மீன் அங்காடி கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் அங்காடி அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியில் மீன் வியாபாரம் மேற்கொள்ளும் மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story