மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை

மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் சம்பத், பொருளாளர் ராமச்சந்திரன், துணை தலைவர் பிரேமா, மாநில திட்டக் கோட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேங்கிக் கிடக்கும் பணிகளை சீராக செய்திட காலியாக உள்ள பணி இடங்களை நிரப்பிட வேண்டும் எனவும், தொழிலாளர், ஆய்வாளர் மற்றும் உயர் நீதிமன்றங்களில் உத்தரவு பெற்றுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை, பணி நியமனம் செய்திட தமிழக அரசு மற்றும் மின்வாரியத்தை வலியுறுத்தியும் தீர்மானம் இயற்றப்பட்டது.

மேலும், மின் வாரியத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தேங்கி கிடக்கும் 500க்கும் மேற்பட்ட வாரிசு வேலை விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து உத்தரவு வழங்கிட வேண்டும் எனவும், மின்வாரிய தொழிற்சங்க பிதாமகனாக திகழும் டாக்டர் கிருஷ்ணன் அவரது பெயரை சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய எட்டாவது வளாகத்திற்கு சூட்ட வேண்டும் எனவும் தீர்மானம் இயற்றப்பட்டது. வேலைப்பளு ஒப்பந்தப்படி பதவிகளை அளித்து தற்போதுள்ள மின் இணைப்புகளுக்கு ஏற்றார் போல, புதிய பதவிகளை அனுமதித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story