மூடப்பட்ட தாய் சேய் நிலையத்தை உடனே திறக்க தீர்மானம் !

மூடப்பட்ட தாய் சேய் நிலையத்தை உடனே திறக்க தீர்மானம் !

பொதுக்குழு கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது, மூடப்பட்ட தாய்சேய் நிலையத்தை திறப்பது உட்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன
பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார், ஒன்றிய தலைவர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் சாந்தி வரவேற்புரையாற்றினார் வள்ளாலகரம் ஊராட்சியில் உள்ள பூண்டி வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும், நாகங்குடியில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நின்று சொல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், செருதியூர் ஊராட்சியில் சாலை சீரமைப்பு பணியில் கம்பி மற்றும் செம் மண் போட்டுவிட்டு தார் ஊற்றாமல் பல மாதங்களாக கிடப்பில் உள்ள சாலையில் உடனடியாக தார் ஊற்றவேண்டும்,செருதியூர் பெரிய குளத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும், கோடங்குடி கிராமத்தில் இயங்கி வந்த தாய்சேய் மையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அருண்மொழிதேவன் ஊராட்சி மற்றும் உக்கடை கிராமத்தை இணைக்கும் இணைப்பு சாலையினை உடனடியாக சீரமைக்க வேண்டும் ,குளிச்சார் ஊராட்சியில் அறும்பூர் கிராமத்தில் இடுகாட்டிற்கு செல்ல சாலை மற்றும் பாலம் அமைத்துத்தர வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, நரேந்திர பாலா நன்றி உரை ஆற்றினார்.

Tags

Next Story