பொள்ளாச்சி அருகே காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்

பொள்ளாச்சி அருகே காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்

காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

பொள்ளாச்சிஅருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள சுந்தரகவுண்டனூர் மற்றும் மரம்பிடுங்கி கவுண்டனூர் ஆகிய கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த இரண்டு கிராமங்களுக்கும் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் விநியோகம் சரி வர கொடுக்கவில்லை எனவும்,

கடந்த 30 நாட்களாக முழுவதுமாக குடிநீர் வராததால் குடிப்பதற்கும் மற்றும் கால்நடைகளுக்கும் குடிநீர் இல்லாததால் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள் சுந்தரகவுண்டனூர் மற்றும் மரபிடுங்கி கவுண்டனூர் ஆகிய கிராமத்தை பெண்கள் பொள்ளாச்சி தாராபுரம் பிரதான சாலையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகாமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரை தொடர்ந்து,

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் செல்ல திருப்பிவிடபட்டது. பேட்டி.மகாலட்சுமி- சுந்தராகவுண்டனூர்.

Tags

Read MoreRead Less
Next Story