பைக்கை தள்ளிச் சென்ற நபரை மறித்து வழிப்பறி - 5 பேர் கைது

பைக்கை தள்ளிச் சென்ற நபரை மறித்து வழிப்பறி - 5 பேர் கைது

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அருகே மூவலூர் புதுப்பாலத்தின்வழியாக பெட்ரோல் இல்லாத பைக்கை தள்ளிச்சென்ற நபரை வழிமறித்து அடித்து உதைத்து அவரிடமிருந்து ரூ.2000 பணத்தை பிடுங்கிய 5 இளைஞர்களை குத்தாலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை அருகே குத்தாலம் ராதாநல்லூர் இளங்கோவன் மகன் சதீஷ்குமார்(32) என்பவர் சம்பவ தினத்தன்று தனது பைக்கில் ராதாநல்லூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார், அந்த நேரத்தில் வண்டியில் பெட்ரோல் இல்லாததால் வாகனத்தை தள்ளிச் சென்றார் இதைக்கண்ட 5 இளைஞர்கள் சதீஷ்குமாரை பிடித்து அவரை மிரட்டி அவரிடமிருந்த ரூ.2 ஆயிரத்தை பிடுங்கியும் இதை யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்றுவிடுவோம் என்று மிரட்டி அடித்து உதைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சதீஷ்குமார் குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் உதவி ஆய்வாளர் கண்ணன் விசாரணை மேற்கொண்டு இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கங்கணம்புத்தூர் பிரவின்(18), மூவலூரை சேர்ந்த ஸ்ரீநிவாஸ்(19) நவின்குமார்(19) பிரவின்ராஜ்(19) மற்றும் மல்லியத்தை சேர்ந்த தேவஆகாஷ்(19) ஆகியோரை பிடித்து அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து அனைவரையும் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story