கரூர் : சனிப்பெயர்ச்சி விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

X
சனிபெயர்ச்சி
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு பூஜை நடைபெற்றது
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ சனீஸ்வர பகவானை மனம் உருகி பிரார்த்தனை செய்தனர். கரூரில், புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மாலை சிறப்பு பூஜையுடன் லட்சார்ச்சனை நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக 20.12.23 புதன்கிழமை மாலை 5:20 மணி அளவில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் "மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி" ஆனதை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, பன்னீர்,விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சனீஸ்வர பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்த பிறகு, ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து மாலை 5:25 மணி அளவில் சனீஸ்வர பகவானுக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சனி பெயர்ச்சி விழாவை சிறப்பிக்கும் வகையில் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வந்து சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு சென்றனர்.
Next Story
