வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு: 48பேருக்கு பணி நியமன ஆணை

அரசு கலைக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 48 பேருக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட 48 பேருக்கு பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, வேலைவாய்ப்பு துறை மண்டல என இயக்குனர் ஜோதிமணி,கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்றோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story