உரிய அனுமதி இன்றி பட்டாசு விற்பனை - பெண் கைது.

உரிய அனுமதி இன்றி பட்டாசு விற்பனை - பெண் கைது.

காவல் நிலையம் 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி விற்பனை செய்யும் நோக்கோடு பட்டாசுகளை வைத்திருப்பதாக காவல் உதவி ஆய்வாளர் அப்துல்லாவுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நேற்று மதியம் 12 மணியளவில் கரூர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள ராஜா கடையில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.இந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது,அந்த கடையின் உரிமையாளர் சங்கர் கணேசின் மனைவி கவிதா உரிய உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் நோக்கோடு பட்டாசுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உரிய உரிமம் இல்லாமல் பட்டாசுகளை வைத்திருந்த கவிதா மீது வழக்கு பதிவு செய்த கரூர் மாநகர காவல் துறையினர், பின்னர் அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

Tags

Next Story