செல்வ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா!

செல்வ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா!

தீமிதி திருவிழா

மயிலாடுதுறை அருகே ஸ்ரீ செல்வ மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் ஸ்ரீ செல்வ மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் 118 ஆம் ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து பூச்சொறித்தல் மற்றும் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதனிடையே சித்ரா பவுர்ணமி நாளான இன்று பத்தாம் நாள் நிகழ்வாக தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை அடுத்து காவிரி கரையில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் ஏராளமானோர் ஊர்வலமாக மேள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். அங்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் ஏராளமான கூண்டு காவடிகள் தீமிதித்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story