ஏழுவருட காதல் மூன்று முறை கருக்கலைப்பு காதலி தர்ணாவால் காதலன் கைது!

ஏழுவருட காதல் மூன்று முறை கருக்கலைப்பு காதலி தர்ணாவால் காதலன் கைது!

 காதலி தர்ணா

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்த காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காதலன் வீட்டில் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் காதலனை கைது செய்து சிறையிலடைத்த போலீசார்.
மயிலாடுதுறை அருகே செங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுகப்பிரியா (26). இவர் சென்னையில் நர்சிங் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வினோத் (29). இவர் டாடா ஏசி வாகனம் ஓட்டுகிறார். வெளிநாடு சென்று வந்தவர். இவர்கள் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சுகப்பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று இருவரும் தனிமையில் இருந்ததால் இரண்டு முறை கரு கலைப்பு செய்ததாக கூறும் சுகப்பிரியா மூன்றாவது முறையாக கர்ப்பம் தறித்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாலி கட்டி தன்னை ரகசிய திருமணம் செய்து கொண்ட காதலன் வினோத். சத்து மாத்திரை என்று கூறி கருகலைப்பு மாத்திரையை வாங்கி தந்து ஏமாற்றி வயிற்றில் வளர்ந்த 3வது கருவை கலைத்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு பெண்ணை திருமணம் செய்ய முயல்வதாக மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . 56 நாட்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள சுகப்பிரியா நேற்று வினோத் வீட்டிற்கு சென்று வாசலில் அமர்ந்து நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை சொல்லமாட்டேன் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வினோத் வீட்டில் இருந்த பெற்றோர்கள் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்ட நிலையில் வீட்டின் வாசல் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்றதாக காவல்நிலையத்தில் வினோத் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தினர் வினோத்தை கைது செய்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல் 420, 417 ஆகிய சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Tags

Next Story