பொன்னேரி அம்மன் கோவிலை சூழ்ந்துள்ள கழிவுநீர்

பொன்னேரி அம்மன் கோவிலை சூழ்ந்துள்ள கழிவுநீர்

கோயிலுக்குள் கழிவு நீர்

பொன்னேரி நகராட்சி 14வது வார்டு அம்மன் கோவிலில் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வேதனை அடைகின்றனர்.

பொன்னேரி நகராட்சி வார்டு 14 தண்டபாணி நாடார் தெரு வார்டில் , மழை பெய்ததால் அம்மன் கோயில் வளாகத்தினுள் புகுந்து கழிவு நீர் குட்டை போன்று மாறி துர்நாற்றம் வீசத்துவங்கி விட்டது.

இதன் காரணமாக அம்மனை வழிபட வரும் பக்தர்கள், கழிவு நீர் தேங்கி இருப்பதை கண்டும், வழிபாடு நடத்த முடியாத காரணத்தினாலும் மிகுந்த மனவேதனை அடைகிறார்கள்.. மேலும், மழை இல்லாத காலங்களிலும், திறந்த வெளியில் கழிவு நீர் ஓடிக்கொண்டிருப்பதாலும் துர்நாற்றம் வீசுவதாலும் பொது மக்கள் நோய்வாய்ப்படும் சூழலுக்கு ஆளாகிறார்கள்.

Tags

Next Story