மாணவிக்கு பாலியல் சீண்டல் - மாணவிகள் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு !

மாணவிக்கு பாலியல் சீண்டல் -  மாணவிகள் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு !

 பாலியல் சீண்டல்

கரூரில், நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல். மாணவிகள் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில், நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல். மாணவிகள் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு. கரூர் அடுத்த ஆத்தூர் பிரிவு பகுதியில் செயல்படும் நிறுவனம் பாக்யா பாராமெடிக்கல் இன்ஸ்டியூட். இந்த நிறுவனத்தில் மாணவிகள் மற்றும் மாணவர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த ஏன் சூட் நிறுவனத்தின் உரிமையாளர் அங்கு பயிலும் மாணவிக்கு பாலியல் சீண்டல் செய்ததாக சக மாணவர்கள் இடையே புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு பயின்று வரும் மாணவ மாணவிகள் இன்று கரூர் காவல் நிலையத்திற்கு வந்து பாலியல் சீண்டல் குறித்து புகார் அளிக்க வந்தனர்.

பாலியல் சீண்டல் குறித்து மாணவ - மாணவியர் புகார் அளிக்க வந்ததால் கரூர் காவல் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது. பிறகு காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story