கரூரில் சிவசேனா சார்பில் பால்தாக்ரே 98-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.

கரூரில் சிவசேனா சார்பில் பால்தாக்ரே 98-வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது.

கரூரில் சிவசேனா சார்பில் பால்தாக்ரே 98-வது பிறந்தநாள் கொண்டாட்டம். சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே என அழைக்கப்படும் பால சாகேப் கேஷவ் தாக்ரே 1926 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி பிறந்தார். இவர் மகாராஷ்டிராவில் மராட்டிய இத்துக்களுக்காக சிவசேனா என்ற கட்சியை துவக்கினார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி காலமானார்.

இந்நிலையில் அவரது பிறந்த நாளான ஜனவரி 23 கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே சிவசேனா கட்சியில் கரூர் மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமையில் பால் தாக்கரே பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இந்நிகழ்வில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் முரளி, மாநில வர்த்தக அணி செயலாளர் சக்தி முருகன், மாநில பிரச்சார பிரிவு செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் கட்சி மாநில நிலை குழு உறுப்பினர் சுரேஷ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

Tags

Next Story