சிராசாயி மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

சிராசாயி மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

தீ மிதி திருவிழா

சிராசாயி மகா மாரியம்மன் ஆலய தீ மிதி திருவிழா நடைபெற்றது.

. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிரசாயி மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், அலகு காவடிகள் புறப்பட்டு வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story