மயிலாடுதுறை : ஸ்ரீ மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை  : ஸ்ரீ மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்

சிறப்பு அபிஷேகம்

மாயூரநாதர் திருக்கோயில் உள்ள ஸ்ரீ மகா கணபதி சன்னதியில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறையில் உள்ள புகழ்வாய்ந்த ஸ்ரீ அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் ஶ்ரீ மகாகணபதி தனிசன்னதி உள்ளது. 9 அடி உயரத்தில் பிரமாண்ட விநாயகராக ஸ்ரீ மகா கணபதி எழுந்தருளியுள்ளார். இன்று சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மகா கணபதி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பால், சந்தனம், இளநீர், தேன், பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story