64 கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் - ஆட்சியர்

64 கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் - ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் தங்கவேல்

டிசம்பர் 5-ல் 64 கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம். - ஆட்சியர் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற "64 உயரும் கிராம ஊராட்சிகளில் 05.12.2023 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டத்தில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற "64 உயரும் கிராம ஊராட்சிகளில் (ODF Plus-Rising )" திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற மற்றும் பார்வைக்கு தூய்மையாக விளங்கும் கிராம ஊராட்சிகளை "முன் மாதிரி கிராமம்" ஆக (ODF Plus-Model) அறிவிப்பு செய்யப்பட வேண்டும் என்ற விவாதப்பொருளைக் கொண்டு 05.12.2023 அன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் 05.12.2023 அன்று நடைபெறவிருக்கும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பி்ல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story