மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்ட மக்களுக்காக சிறப்பு ஹோமம்

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்ட மக்களுக்காக சிறப்பு ஹோமம்

மயிலாடுதுறையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்ட மக்களுக்காக சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.

மயிலாடுதுறையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்ட மக்களுக்காக சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் வண்டிக்கார தெரு ஸ்ரீ பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் இன்று உலக நன்மை வேண்டியும், மிக்ஜாம் புயல் பாதிப்பு நீங்க வேண்டியும், ஊர் செழிக்கவும் நம்ம மாயவரம் நண்பர்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகள் சார்பாக சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து நிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்ட மக்கள் கஷ்டங்கள் நீங்கி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி ஸ்ரீ பிரசன்ன மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதலை நிறைவேற்ற வழிபாடு செய்தனர்.

Tags

Next Story