காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஸ்ரீதர் வாண்டையார் பிரச்சாரம்

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஸ்ரீதர் வாண்டையார் பிரச்சாரம்

ஸ்ரீதர் வாண்டையார் பிரசாரம்  

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்குவோம் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மயிலாடுதுறை அருகே மூமுக நிறுவன தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பிரசாரத்தின் போது பேசினார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து மணல்மேடு அருகே பட்டவர்த்தி பகுதியில் மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீடு கேட்டு கிடைக்கவில்லை. பாஜக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது. திமுக அரசு நம்முடைய கோரிக்கையை ஏற்று ஜாதிவாரியாக கணக்கெடுத்து நமது சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு பெற்று தருவோம் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததால் கூட்டணி அமைத்தோம்.

விவசாயிகளின் விளை பொருள்களுக்கு தற்போது உரிய விலை கிடைக்காமல் உள்ள நிலையில், விவசாயத்துக்கு செய்யும் செலவோடு சேர்த்து 50 சதவீதம் லாபம் வழங்குவதாக திமுக அரசு தெரிவித்துள்ளது. பாஜக கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்கிறது. ரூ.14 லட்சம் கோடி வரை பெரும் முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கின்றனர். பிரதமர் வேட்பாளர் இல்லாத கூட்டணியை அதிமுக வைத்துள்ளது. அதிமுகவுக்கு வாக்களித்தால் அது மறைமுகமாக பிஜேபிக்கு தான் செல்லும் என்று அவர் பேசினார். கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் மற்றும் திமுக, மூவேந்தர் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story