புனித அந்தோணியார் கோயில் 28 ஆம் ஆண்டு திருவிழா

புனித அந்தோணியார் கோயில் 28 ஆம் ஆண்டு திருவிழா


திருத்தேர் பவனி


தரங்கம்பாடி அருகே புனித அந்தோணியார் ஆலய 28 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் பவனி நடைபெற்றது.
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் 28-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆத்துகுடி பங்குத்தந்தை மரியதாஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, மின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட 3 திருத்தேர்களில் புனித மேரிமாதா, புனித அந்தோனியார் மற்றும் புனித சம்முன்ஸ் சொரூபங்கள் தனித்தனியே எழுந்தருளச் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி, மாலை வழங்கி வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story