9ஆம் வகுப்பு மாணவிக்கு 10ஆம்வகுப்பு மாணவன் பாலியல் துன்புறுத்தல் - போக்சோவின் கீழ் கைது

9ஆம் வகுப்பு மாணவிக்கு 10ஆம்வகுப்பு மாணவன் பாலியல் துன்புறுத்தல் - போக்சோவின் கீழ் கைது

காவல்துறை விசாரணை


மயிலாடுதுறை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் பத்தாம் வகுப்பு மாணவன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தால் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை அருகே உள்ள காளி கிராமத்தில் காலை நேரத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி வீட்டில் அவரது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியின் உறவினர், அவரது வீட்டிற்குள் புகுந்து மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார், இதனால் பயந்து போன மாணவி வீட்டை விட்டு வெளியில் வந்து கூச்சலிட்டார். இதைக் கண்ட மாணவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான், இது குறித்து மாணவியின் பெற்றோர் சிறு குழந்தைகளாக இருப்பதால்பேசிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டனர். இந்த சமயத்தில் மாணவன் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார், இதனால் மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவள்ளி செய்த விசாரணையில் மாணவியின் பெற்றோர் கூறிய சம்பவம் உண்மை என்பதால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story