சாலை விபத்தில் மாணவர் பலி

சாலை விபத்தில் மாணவர் பலி

பலியானவர்

மயிலாடுதுறை மாவட்டம்,மங்கைநல்லூர் அருகே விபத்தில் மாணவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை அருகே மல்லியம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சிவா(22) முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் இவர் இன்று 10க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் மங்கைநல்லூர் கிராமத்தில் உள்ள திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து நண்பர்களுடன் மற்றொரு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறை நோக்கி இரு ஸ்கூட்டி மாடல் ஹோண்டா இருசக்கர வாகனத்தில் மூவலூரைச் சேர்ந்த தேவசகாயம் மகன் ராஜ்குட்டி என்பவர் ஓட்ட சிவா வாகனத்தில் அமர்ந்து வந்துள்ளார்.

அப்போது அகரக்கீரங்குடி கிராமத்தில் திருவாரூர் செல்லும் சாலையில் எதிரே சவுக்கு மூங்கில்களை ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனமும் இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதியது. இதில் இருசக்கர வாகன முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. அமர்ந்துவந்த சிவா சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

தலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய ராஜ்குட்டியை மீட்டு அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அறிந்து வந்த பெரம்பூர் போலீசார் சிவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story