சாலை பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வுக் கூட்டம்.

சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வுக் கூட்டம். கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட அளவில், பொதுமக்கள் பல வருடங்களாக அமைக்கப்படாத சாலை குறித்து அளித்த மனுக்கள் குறித்தும், சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது குறித்தும், சாலையில் வாகன போக்குவரத்து விதி மீறல்கள் நடக்காமல், கண்காணிப்பது குறித்தும், மணல் கடத்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பிரமானந்தம், மாவட்ட ஆட்சியரின்(பொது) நேர்முக உதவியாளர், தண்டயுதாபாணி, கரூர் கோட்டாட்சியர் ரூபினா, குளித்தலை கோட்டாட்சியர் ரவிசந்திரன்,மாவட்ட ஆட்சியர் அலுவலக (குற்றவியல்) மேலாளர் சுரேஷ், சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்கம், கோபால், கிராமியம் நாராயணன், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story