பொள்ளாச்சியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த சாரார் ஆட்சியர்

பொள்ளாச்சியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த சாரார் ஆட்சியர்

பள்ளி வாகனங்கள் ஆய்வு

பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார்  பள்ளிகளில் உள்ள 372 வாகனங்களை சார் ஆட்சியர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆண்டுதோறும் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம் அதன்படி இன்று பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இயக்கப்படும் 372 வாகனங்களை இன்று ஆய்வு செய்யப்பட்டது.

பொள்ளாச்சி ஊஞ்சலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா,பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா, வேக கட்டுப்பாட்டு கருவி செயல்படுகிறதா, அவசர கால வழிகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா,

பள்ளி மாணவர்கள் ஏறுவதற்கான படிகள் சரியான உயரத்தில் உள்ளதா, மருத்துவ உபகரணங்கள் இருக்கிறதா போன்றவற்றை ஆய்வு செய்தனர், மேலும் திடீரென பள்ளி வாகனங்களில் தீ பிடித்தால் உடனடியாக தீயை அணைப்பது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு துறை சார்பில் செயல் விளக்கவும் அளிக்கப்பட்டது,. அரசு உத்தரவுப்படி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றும், போக்குவரத்து விதி மூலம் வாகனங்கள் இயக்கபடுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அந்த வாகனங்கள் இயக்க தடை செய்யப்பட்டு அதை மீண்டும் சரி செய்து பின்னரே இயக்க அனுமதிக்கப்படும் என்றும் ஆய்வு செய்த பின்னர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பேட்டி-கேத்தரின் சரண்யா.,IAS -சார் ஆட்சியர்,பொள்ளாச்சி.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649..

Tags

Read MoreRead Less
Next Story