திடீர் பிரேக்கால் விபத்து

X
காவல் நிலையம்
வேகமாக சென்ற கல்லூரி பேருந்து திடீரென பிரேக் போட்டதால்,பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து - காவல்துறை வழக்கு பதிவு
கரூர் மாவட்டம், கிழக்கு ஆண்டாங் கோவில், ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் நாட்ராயன் மகன் கௌஷிக் 19. கரூர்- ஈரோடு சாலையில் அவருக்கு சொந்தமான டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது,இவரது வாகனத்திற்கு முன்பாக சென்ற திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூர்,ஆர்.கோம்பை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் 27 என்பவர், தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்தை ஓட்டிச் சென்றார். கல்லூரி பேருந்து கரூர் -ஈரோடு சாலையில், மருத்துவ நகர் அருகே வந்த போது, ஓட்டுநர் வேல்முருகன் திடீரென எவ்வித சிக்னலும் காட்டாமல் பேருந்துக்கு பிரேக் இட்டார். இதனால் ,பின்னால் டூவீலரில் வந்து கொண்டிருந்த கௌஷிக் வாகனம் பேருந்து பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கௌசிக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கௌசிக் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பேருந்தை கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்பட காரணமான வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story