மயிலாடுதுறை : தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை : தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி   கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

மயிலாடுதுறையில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாரத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 243 அரசாணையை திரும்ப பெற்று பழைய நடைமுறையில் முன்னுரிமை வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும், தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றிட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags

Next Story