தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்.

கரூரில்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் கூட்டரங்கில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொது செயலாளர் பாரி, பொருளாளர் விஜயபாஸ்கர், மாநில துணைத்தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 32 மாவட்டங்கள் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் நிலவி வரும் பிரச்சனைகள், மாநில நிர்வாகத்திடம் வைத்த கோரிக்கைகள், வரவேண்டிய அரசாணைகள் குறித்து மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதித்தனர்.

Tags

Next Story