கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கைது 

பொன்னேரியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
பெரியபாளையம்:--தாமரைப்பாக்கம் அடுத்த, பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பெரியபாளையம் மதுவிலக்குப் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில், ஒருவர் பைக்கில் அமர்ந்திருந்தார். போலீசார் அவரை விசாரித்ததில் அவர் பொன்னேரி அருகே, விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த, வினோத், 36 என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது அவரிடம், 1.2 கிலோ கஞ்சா இருந்தது. மேலும், அவரிடம் இருந்து ஒரு மொபைல் போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வினோத்தை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story