கரூர் அருகே மாரடைப்பால் தற்காலிக சுகாதாரப் பணியாளர் உயிரிழப்பு

கரூர் அருகே மாரடைப்பால் தற்காலிக சுகாதாரப் பணியாளர் உயிரிழப்பு
X

மருத்துவமனை

கரூர் அருகே மாரடைப்பால் மாநகராட்சி தற்காலிக சுகாதாரப் பணியாளர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், வடக்குதெரு, கே எம் சி காலனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி வயது 50. இவர் கரூர் மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

மேலும், கரூரில் செயல்படும் பாபா பேப்ரிக்ஸ் அண்ட் டெக்ஸ் என்ற நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென ராமசாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் ராமசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் ராமசாமி உயரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராமசாமியின் மனைவி செல்வி வயது 49 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர்,

உயிரிழந்த ராமசாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story