அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் 8மணிநேரம் நடைபெற்ற சோதனை நிறைவு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் 8மணிநேரம் நடைபெற்ற சோதனை நிறைவு

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் 8மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த இராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று காலை 7 மணிக்கு மேல் அமலாக்குத்துறையினர் சோதனை நடத்தினர்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில், இன்று 5- அதிகாரிகள் சோதனையில் ஈடுபட கரூர் ராமேஸ்வரபட்டி பகுதியில் உள்ள அமைச்சர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் இடையே வெளியே சென்ற அதிகாரி ஒருவர், மேலும் ஒரு அதிகாரியை அழைத்து வந்தார். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில்,தற்போது அவரது வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய அதிகாரி ஒருவர் அழைத்து வரப்பட்டு கணினியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் பெற்றோர்கள் மட்டும் இருந்த நிலையில், பெற்றோர்களிடம் தொடர்ந்து சுமார் எட்டு மணி நேரம் நடைபெற்ற சோதனையை முடித்துக் கொண்டு அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

Tags

Next Story