குடியிருக்கும் வீட்டை இடித்துத் தள்ளிய கூலிப்படைகள்

குடியிருக்கும் வீட்டை இடித்துத் தள்ளிய கூலிப்படைகள்

பாதிக்கப்பட்டவர்கள் மனு


செங்கல் சூளைக்கு இடைஞ்சலாக இருக்கும் இடத்தை காலிசெய்ய மறுத்ததால் வீட்டை அடித்து உடைத்த முன்னாள் எம்எல்ஏ சகோதரரது அடியாட்களின் அடாவடி மயிலாடுதுறை அருகே உள்ள எடுத்துக்கட்டிசாத்தனுரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அருள்மிகு நித்தியவினோதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வசித்துவந்த வெண்ணிலா என்பவரின் வீட்டை வாங்கியுள்ளார், வெண்ணிலாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவரிடம் 2.50 லட்சம்ரூபாய் கொடுத்து வீட்டை எழுதி வாங்கியிருந்தார்.

செந்தில்குமார் வெளிநாடு சென்றுள்ளார், வெண்ணிலா இறந்ததும் அந்த வீட்டிற்கு செந்தில்குமார் மனைவி தனது மகனுடன் குடியேறினார், பூம்புகார் முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜின் சகோதரர் உதயகுமார் அப்பகுதியில் செங்கல் சூலை அமைத்துள்ளார், அதற்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் விலைக்குக் கேட்டுள்ளார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மகரஜோரி.

இந்நிலையில் மகரஜோதி குடியிருந்த வீட்டை உதயகுமாரது ஆட்கள் இடித்துத்தள்ளியுள்ளனர், பொறையார் போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அந்த வீட்டை மீண்டும் புதுப்பித்துள்ளார், இதைக்கண்ட உதயகுமாரின் ஆட்களான விசலூர்குமார், சேட்டு ஆகியோர் இன்று வீட்டிற்குள் புகுந்து கத்தி கடப்பாறையால் வீட்டை உடைத்து நாசம் செய்தனர், உடனடியாக 100க்கு போன் செய்து செய்தியை சொன்னதற்கு போலீசார் வரவில்லை, பொறையார் போலீசார் மீண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை இதுகுறித்து மகரஜோதி மயிலாடுதுறை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story