கரூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகை கொள்ளை

கரூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகை கொள்ளை

காவல் நிலையம் 

கரூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா அப்பி பாளையம் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை வயது 60. இவர் தனது வேலை தொடர்பாக மார்ச் 30ஆம் தேதி அன்று காலை 8:30 மணி அளவில், வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

தனது பணிகளை முடித்துவிட்டு, ஏப்ரல் மூன்றாம் தேதி இரவு 10 மணி அளவில், வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்து பார்த்த அவருக்கு, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 1/2 பவுன் தங்க நகையை களவாடி சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக அண்ணாதுரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தங்க நகையை களவாடிச் சென்ற மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

Tags

Next Story