மனைவியின் அந்தரங்க போட்டோவை வெளியிடுவேன் மிரட்டல் கணவர் மீது வழக்கு

மனைவியின் அந்தரங்க போட்டோவை வெளியிடுவேன் மிரட்டல்   கணவர் மீது வழக்கு

காவல் துறை

மயிலாடுதுறை அருகே சீர்காழி பகுதியை சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில் அவரது கணவர் ( ராணுவ வீரர்) மீது வழக்கு
மயிலாடுதுறை அருகே கிடாரங் கொண்டான் மெயின் ரோடு அன்பழகன் மகன் வினோத் இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சீர்காழி அருகே உள்ள நிம்மேலி கிராமத்தை சேர்ந்த கோகிலா என்ற பெண்ணுக்கும் சென்ற வருடம் மார்ச் மாதம் திருமணம் நடந்தது. திருமடமான நாளிலிருந்து குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வாடிக்கையா இருந்தது, அதன்பிறகு அவர் ராணுவத்திற்கு வேலைக்கு சென்று விட்டார், அங்கிருந்து அடிக்கடி வீடியோ கால் மூலம் பேசியவர் மனைவியை நிர்வனமாக வீடியோ கால் செய்ய வற்புறுத்தி உள்ளார் கணவனின் வற்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். இந்த ஆண்டு மீண்டும் விடுமுறைக்கு வந்த வினோத் குடித்துவிட்டு வந்து வம்பு வளர்த்துள்ளார், இது குறித்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, சமாதானமாகி கணவர் வீட்டிற்கு வந்தபோது அவரது செல்போனில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருந்த மனைவியின் நிர்வாண போட்டோவை மனைவியின் சகோதரர்களுக்கு அனுப்பியுள்ளார், மேலும் தகராறு செய்யும்போது இந்த போட்டோவை வலைதளங்களில் விடுவேன் என்று மிரட்டி வருகிறார், இதுகுறித்து கோகிலா செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொலை மிரட்டல் தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வினோத் மீது செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்

Tags

Next Story