பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

கரூர், வடக்கு தெருவில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்த சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் பாரதிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 25ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், பசுபதிபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, வடக்கு தெரு, கொடியரசு கோவில் அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, வடக்கு தெருவை சேர்ந்த லூர்துசாமி, தொழிற்பேட்டை அருகே உள்ள கேகே நகர் பகுதியைச் சேர்ந்த ராஜன், வடக்கு காந்திகிராமம், அரியா நகர் பகுதியைச் சேர்ந்த சக்தி சுப்பிரமணி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து,அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.150-ம் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story