ராமானூரில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

ராமானூரில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

காவல் நிலையம் 

ராமானூரில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, ராமானூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் பானுமதிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜனவரி 28ஆம் தேதி மதியம் 12 மணி அளவில், ராமானுர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் செயல்படும் சாரதா பள்ளி அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, கரூர், எஸ். வெள்ளாளப்பட்டி அருகே உள்ள சணப்பிரெட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள், பசுபதிபாளையம், வெண்காட்டு தெரு பகுதியைச் சேர்ந்த தங்கமணி, பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த வேளாங்கண்ணி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 300-யும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த பசுபதிபாளையம் காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story