கொலை வழக்கில் மூவர் கைது

கொலை வழக்கில் மூவர் கைது

கொலை வழக்கில் மூவர் கைது

பொன்னேரி அடுத்த பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 27. இவருக்கும், பொன்னேரி சிவன்கோவில் தெருவை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பிரியா, 25, என்பவருக்கும் தொடர்பு இருந்தது. கடந்த ஒரு ஆண்டாக சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருடன் பழகியதால் கோபாலகிருஷ்ணன் தகராறு செய்துள்ளார். 13ம் தேதி இரவு, பொன்னேரி திருவாயற்பாடியில் கோபாலகிருஷ்ணனை பிரியாவும் நான்கு பேர் கொண்ட கூலிப்படையினரும் வெட்டிக் கொன்றனர். பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் பிரியாவை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சேத்துபட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் 33, அஜித்குமார் 27, சரத்குமார் 31, ஆகியோரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story