சமத்துவபுரம் அருகே சூதாடிய மூன்று பேர் கைது

கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் சமத்துவபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நவம்பர் 6ஆம் தேதி அதிகாலை 3: மணியளவில் சமத்துவபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அப்பகுதியில் உள்ள சாயப்பட்டறை அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் ஆண்டாள் கோயில் அருகே உள்ள ரெட்டிபாளையம், வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் , கரூர் வடிவேல் நகரை சேர்ந்த முத்துக்குமார், திருக்காம்புலியூர் நந்தனா தெருவை சேர்ந்த பூபதி ஆகிய மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்டைகளையும், ரூபாய் 2200-யும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வாங்கல் காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags

Next Story