மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூ 200 பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.
கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அருகம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் ரூபினிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், பிப்ரவரி 18ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் அருகம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள மயானம் அருகே முள் காட்டில் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ,திருச்சி மாவட்டம், துறையூர், கள்ளிக்குடி காலனி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணி, கரூர் மாவட்டம்,தேசிய மங்கலம் அருகே உள்ள சின்னையம்பாளையத்தை சேர்ந்த பாபு, கரூர், பஞ்சமாதேவி அருகே உள்ள அரசு காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (எ) கிருமி கார்த்தி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.200 -யும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Next Story