பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

வெற்றி தியேட்டர் பின்புறம் பணம் வைத்து சூதாடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வெற்றி தியேட்டர் பின்புறம் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், மே 18ஆம் தேதி மாலை 5:30- மணி அளவில், பசுபதிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள ராமானூர் பகுதியில் செயல்படும் வெற்றி தியேட்டர் பின்புறம் உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட அருணாச்சலம் நகரை சேர்ந்த சுபாஷ், ராமானுர் பகுதியைச் சேர்ந்த மருதைவீரன், ஆண்டாள் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.200-ஐயும் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story