பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது!

பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது!

சூதாட்டம்

சோமூர் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 150 பறிமுதல்.
சோமூர் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 150 பறிமுதல். கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோமூர் பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜூலை 6ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், சோமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட சோமனூர் வடக்கு தெருவை சேர்ந்த ஜெகன், சோமூர் மூப்ப தெருவை சேர்ந்த சின்னசாமி, சோமூர் அண்ணா நகரை சேர்ந்த பழனிசாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.150 பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பிறகு அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags

Next Story