வெங்கமேடு அருகே சூதாடிய மூன்று பேர் கைது

.கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகுளத்து பாளையம் பகுதியில் பணம்வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நாகமாணிக்கத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அக்டோபர் 28ஆம் தேதி காலை 9 மணி அளவில் பெரிய குளத்துபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சின்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் வயது 25, காட்டுக்குடி புதூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் வயது 21,ரமேஷ் வயது 47 ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 200-யும் பறிமுதல் செய்த காவல்துறையினர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story