மன்மங்கலம் அருகே சூதாடிய மூன்று பேர் கைது

மண்மங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது.

கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் நவம்பர் நான்காம் தேதி இரவு 7:30 மணியளவில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார் காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார். அப்போது, மன்மங்கலம் அண்ணா நகர் வாட்டர் டேங்க் அருகில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட மன்மங்கலம் காகிதபுரம் பகுதியைச் சேர்ந்த விஜி ,அதே பகுதியைச் சேர்ந்த மணி, அதே பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்திஆகிய மூன்று பேரும் பணம் வைத்து சூதாடியது உறுதி செய்யப்பட்டு, மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.300-யும் பறிமுதல் செய்தனர்.

மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வாங்கல் காவல் துறையினர் பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story